Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Monday, March 4, 2013

singam


This was my first attempt of story telling to make my daughter sleep...  நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்...


ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்தது . அது தான் அந்த காட்டுக்கே ராஜா என்றும் எல்லோரும் அது சொல்வது போல தான் கேட்க வேண்டும் என்றும் எல்லோரையும் பயம்புடுத்தி வைத்திருந்தது. அணைத்து மிருகங்களும் வேறு வழி இல்லாமல் அந்த சிங்கம் சொல்வதை கேட்டுக்கொண்டு வாழந்து வந்தனர். அப்படி யாரவது கேட்கவில்லை என்றால் அவர்கள் அந்த காட்டில் இறுக்க முடியாது.

சிங்கம் இல்லாத போது பிற மிருகங்கள் அனைவரும் கூடி சிங்கத்தை பற்றியே பேசுவார்கள். சிங்கம் அந்த காட்டிற்கு நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அனைவரும் அதை பற்றி கமென்ட் அடித்துக் கொண்டு கிசு கிசு பேசிக் கொண்டே இருப்பார்கள்.சிங்கம் செய்யும் செயல்களைப் பற்றி அவ்வாறு பேசி பேசி அந்த காட்டில் இருக்கும் எல்லா மிருகங்களும் சிங்கம் ராஜாவாக இருக்க தகுதி இல்லாதது என்று மனதிற்குள்ளேயே நினைத்து கொண்டு இருந்தன. அதனால் சிங்கம் சொல்வதை கஸ்ட்டப்பட்டுக் கேட்டுக் கொண்டு வாழ்தன.

அந்த காட்டில் இருந்த கரடி ஒன்று தனக்கு சிங்கத்தை விட அதிக சக்தி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருந்தது. மற்ற மிருகங்கள் எல்லாம் அந்த கரடியை உசுப்பேத்த அது சிங்கம் தூங்கும் போது அதை தாக்கி கொன்று விடலாம் என்று திட்டம் தீட்டியது. கரடி சிங்கத்தை கொள்வதற்காக மரத்தடியே தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் அருகே சென்றது. கரடியின் மூச்சு காற்று பட்டவுடன் சிங்கம் முழித்துக் கொண்டு சட்டென்று திரும்பி கர்ஜித்தது. காடே அதிரும் அளவு சத்தம் கேட்கவே கரடி பயந்து நடுங்கி போய் சிங்கத்தின் மேல் இருக்கும் கொசுவை விரட்ட வந்ததாக சொன்னது. பின் சிங்கத்தை கட்டி பிடித்து டாட்டா சொல்லித் தப்பிச் சென்றது. அங்கே நடந்ததை மற்ற மிருகங்களுக்கு சொல்லி சிங்கத்தின் சக்தியை கரடி விளக்கியது. அனைவரும் சிங்கத்தின் சக்தியை உணர்தனர்.

ஒரு நாள் அந்த காட்டில் இருந்த காக்கா ஒரு மரத்தின் மேலே இருந்தது. அப்போது அங்கு வந்த காட்டு ராஜா சிங்கம் காக்காவை அமைதியாக இருக்கச் சொன்னது. மேலும் அந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பச் சொன்னது. காக்காவிற்கு இது போல விரட்டுவது பிடிக்கவே இல்லை. சற்று தூரம் பறப்பது போல பறந்து பிறகு சிங்கம் சென்றவுடன் திரும்பவும் அதே மரத்திற்கு வந்தது.கா கா கா என்று பாடியது. சற்று நேரத்திற்கு பிறகு அங்கே ஒரு வேடன் துப்பாகியுடன் வந்தான். காக்காவை குறிபார்த்து சுட்டான்.ஆஆஆ காக்கா பயந்து போனது. அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குறி தவறி காக்கா உயிர் பிழைத்தது. மூச்சு இளைக்க வேகமாக பறந்தது.எப்போது தான் காக்காவிற்கு ராஜா சிங்கம் சொன்னதை கேட்டிருந்தால் இந்த இந்த பிரச்சனையே வந்திருக்காது என்பது புரிந்தது. அதனால் தான் சிங்கம் ராஜாவாக இருக்கிறது என்பதை உணர்ந்தது. அதற்கு பின் ராஜா சொல்வதை கேட்டு நல்லபடியாக வாழ்ந்தது.

இதே போல் காலப்போக்கில் அனைத்து மிருகங்களும் சிங்கத்தின் திறமையை உணர்ந்து சிங்கம் போன்ற ஒரு ராஜா  தேவை என்பதை புரிந்து கொண்டனர். அதன் பின் எல்லோரும் ஜாலியாக சிங்கம் சொல்வதை கேட்டு சந்தோஷமாக வாழ்ந்தனர்..


Monday, June 27, 2011

[story] சுண்டக்காய் கதை

சுண்டக்காய் கதை
===================
(As narrated by my wife for kids)

ஒரு ஊர்ல ஒரு சுண்டக்கா இருந்துச்சாம். அத ஒரு அம்மா சமையலுக்காக வெட்ட போனாங்களாம். அந்த சுண்டக்கா, "என்னை வெட்டதீங்க! ப்ளீஸ்" என்றதாம். உடனே அம்மாவும் பாவப் பட்டு அந்த சுண்டக்காய சுண்டி விட்டாங்களாம். சுண்டக்கா உருண்டு உருண்டு போய் ஒரு மூலைல நின்னுச்சாம். அப்படியே ஒக்காந்து கால் மேல கால் போட்டுகிட்டு பாட்டு பாடிச்சாம்.

அடுத்த நாள் காலைல அந்த அம்மா எழுந்திருக்கும் போது வீட்ல கெட்டி இருந்த மாட்டை காணோமாம். அம்மா மாட்டை காணோம்னு அழுதாங்களாம். அத பார்த்த சுண்டக்கா, "அழாதீங்க மா, நான் போய் உங்க மாட்டை கண்டு பிடிக்குரேன்" என்றதாம். மேலும், "எனக்கு ஒரு மூட்டை பொரிகடலை வேண்டும்" என்றதாம். அம்மாவும் சரி என்றார்களாம்.

சுண்டக்கா மாட்டை திருடிய திருடர்களை பிடிக்க புறப்பட்டதாம். ஒரு தீப்பெட்டியில் கயிறு கட்டி அதில் இரண்டு கட்டெறும்பு பூட்டி ரதம் போல் உருவாக்கியாதாம். தீப்பெட்டியில் ஏறிக்கொண்டு கட்டெறும்பு இழுக்க திருடர்களை நோக்கி புறப்பட்டதாம்.

வழியில் ஒரு தேள், சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
தேள், "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.

பிறகு, வழியில் ஒரு பாம்பு, சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
பாம்பு, "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.

பிறகு, வழியில் ஒரு கழுதை, சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
கழுதை, "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.

பிறகு, வழியில் ஒரு யானை, சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
யானை, "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்.

பிறகு, வழியில் ஒரு சேவல், சுண்டக்கவை பார்த்ததாம். "சுண்டக்கா! சுண்டக்கா!! எங்க போர? என்று கேட்டதாம்.
சுண்டக்கா, "நான் திருடன பிடிக்க போறேன்" என்றதாம்.
சேவல், "நானும் கூட வரேன்" என்றதாம்.
சுண்டக்கா, "சரி வா போகலாம்" என்றதாம்..

இவ்வாறாக சுண்டக்கா, தேள், பாம்பு, கழுதை, யானை, சேவல் அனைவரும் திருடன்னின் வீட்டை அடைந்தார்கள். சுண்டக்கா தேளை தீபெட்டியில் போட்டதாம். பாம்பை வீட்டின் அடுப்பில் போட்டதாம். கழுதையை வீட்டின் பின் வாசலில் வைத்ததாம். யானையை வீட்டின் முன் வாசலில் வைத்ததாம். சேவலை வீட்டின் கூரையில் வைத்ததாம். பிறகு சுண்டக்கா ஒளிந்து கொண்டதாம்.

அடுத்த நாள் காலையில் திருடன் ஒருவன் காபி போடுவதற்காக தீப்பெட்டியை திறந்தானாம். தீப்பெட்டியில் இருந்த தேள் அவனை கொட்டியதாம். அய்யோ என்று அலறினானாம். உடனே மற்றொரு திருடன் ஏன்டா கத்துற நான் காபி போடுறேன் பாரு என்று கூறி அடுப்பை திறந்தானாம். அடுப்பில் இருந்த பாம்பு அவனை கொத்தியதாம். இவனும் அய்யோ என்று அலறினானாம். இருவரும் அலறிக் கொண்டு வீட்டின் வெளியே வந்தார்களாம். அங்கிருந்த யானை அவர்களை தும்பிக்கையால் அடித்ததாம். இருவரும் மேலும் அலறிக் கொண்டு வீட்டின் பின் புறம் வெளியே சென்றார்களாம். அங்கிருந்த கழுதை அவர்களை காலால் எட்டி உதைத்ததாம். வேறு வழி இல்லாமல் அவர்கள் வீட்டின் கூரை மேல் ஏறி தப்ப முயன்றார்களாம். அங்கிருந்த சேவல் அவர்களின் கண்களை கொத்தியதாம். உடனே, திருடர்கள் மேல் இருந்து கீழே விழுந்தார்கலாம். சுண்டக்கா ஓடி வந்து திருடர்களை கையிற்றால் கட்டியதாம்.

திருடர்கள் பயந்து போய் மாடு இருக்கும் இடத்தை சுண்டைக்காயிடம் சொன்னார்களாம். சுண்டக்காய் மாட்டை ஓட்டிக் கொண்டு அதன் நண்பர்களுடன் வீடு திரும்பியதாம். அம்மா அவரது மாட்டை பார்த்து மகிழ்ச்சியுடன் இருந்தார்களாம். சுண்டக்காய் அம்மாவிடம் கேட்ட ஒரு மூட்டை பொரிகடலையை சுண்டகாயிடம் கொடுத்தார்களாம். சுண்டக்காய் பொரிகடலையை தனது நண்பர்களுக்கு எல்லாம் கொடுத்ததாம். அனைவரும் சந்தோசமாக வீடு திரும்பினார்களாம்.

அம்மா சுண்டக்காவுக்காக ஒரு சின்ன வீடு செய்து அதில் சோபா போட்டு அதற்க்கு தேவையான சாமான்களை எல்லாம் வைத்தார்களாம். அந்த வீட்டின் சோபாவில் சுண்டக்காவை உட்கார வைத்தார்களாம். சுண்டக்காய் மிகவும் சந்தோசமாக இருந்ததாம்.